Wednesday, July 10, 2013

அவரைப் பந்தல்

சாந்துச் சட்டிகள்
தலையில் தாங்கி
ஓட்டைக் குடிசை வாழ்
சித்தாளுப் பெண்கள்
கொம்பில் ஏறும்
அவரைக் கொடியாய்
மூங்கில் சாரம்
வனைந்த படிகளில்
ஏறினர் ஏறினர்,
’இன்று முதல் ஸ்டிரைக்’
என்றனர்
இறங்க மறுத்தனர்
சாவுக்கென்ன
யாருக்கும் பணியமாட்டோம் எனச்
சூளுரைத்தனர்
இங்கிருந்தபடியே
சமைத்து உண்டு பெற்று
வைராக்யத்தோடே
பழைய வாழ்வை நடத்தினர்

வீட்டுக்காரனோ தந்திரசாலி
பிடுங்கின வரைக்கும் லாபமென்று
காய்களை வளைத்துப்
பறித்துச் சாப்பிட்டான்

மீண்டும் புரட்சி
மரத்துப் போச்சி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP