Tuesday, July 30, 2013

தராசு முள்

என் தராசு முள்
தன் அலைவுப் பிரதேசத்திற்குள்
தடுமாறியது
இருந்தும் –
நடக்கும் கால்கள் நகர்ப்புற இருட்டில்
இடையறாது தன் நிழல்களுடன்
பொருது வென்றபடி வர
கையோடு வரும் அரிக்கேன் விளக்காய்
ஒளி எப்போதும்
என் உடன் வந்துகொண்டுதானிருக்கிறது
நான் புசிப்பதற்காக
தன் உடலை மாத்ரம்
என் பாத்திரத்தில் மீனாகப் போட்டுவிட்டு
வானில் பறந்தது தராசுமுள்
மீண்டும்
மீன்கொத்தியாய் தாழ வந்தது
கடல் தன் அலைகளை இழந்து
மீனாய் நிறைந்தது
வானோ தன் வெறுமையை இழந்து
பறவையாய் நிறைந்தது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP