Sunday, July 7, 2013

இட்லிக்காரம்மாள்

பிழைப்புக்காய்
திசையெங்கும் முட்டிக் களைத்து
நண்பகல் படுக்கையில்
’நான்’ உதிர்ந்துபோய்க் கிடக்கிறேன்.
கட’க்கு கட’க்கு எனத்
தாலாட்டும் ரயில் பிரயாணமாய்
உலகு உருளும் ஒலி.
இட்லிக்கார விதவையம்மாள்
மாவாட்டிக்கொண்டிருக்கும் ஒலி.
நள்ளிரவு.
பாத்திர சப்தமும் அடுப்புக் கனலும்.
உறக்கம் கலைந்து
நாளைய பயத்தில்
வேகும் என் நெஞ்சு.
விடியற்காலை
மெதுவாய் எழுந்து
சாவகாசமாய்க் குளித்துவிட்டு
சாப்பிடப் போவேன் – அவளிடம்
இரண்டே இரண்டு இட்லிகள்
கடன் சொல்லி வாங்கி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP