Thursday, July 25, 2013

குற்றபோதம்

”பிதாவே இவர்களை மன்னியுங்கள்…”

கன்னி மேரியின் கருணை முகம்
வாடல் கதம்பச் சரத்துடன் நோக்க
ஈக்கள் மொய்த்து ஆட்டம் போடும்
’அந்தோணி இறைச்சிக் கடை’;

தெருவோர வெயிலில்
காக்கைகளைக் காதலிக்கும்
காதலி பற்களாக-
உப்புப் போட்டுப் பரத்தி வைத்த
நாறும் மீன்கள்;

தெருமுக்குக் கொடிக் கம்பங்களில்
குழாயடிப் பொம்பளைகளின்
ஆபாஸ நாக்குடன்
ஐந்தாறு;

மிச்சப் பொழுதெல்லாம்
இருண்ட நிழல்களில்
வலை பின்னும் மானுடர்கள்;

சந்தை இரைச்சலைத்
துரத்திவிடும் கடலலைகள்;

(ஊர்) மத்தியிலிருந்து ஆகாயத்தை
நலுங்காமல்
சிலுவை தூக்கித் தொட்டு நிற்கும்
ஒரு மாதா கோவில்…
அதன் மணி ஒலி… எங்கும்
கவியும் குற்றச்சாட்டுகள்…

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP