Sunday, July 28, 2013

மும்முனைக் காதல்

இறங்கினதும்தான் தெரிந்தது
’கடலுக்கு எப்போதுமே
கரைகள் மீதுதான் காதல்’

கோபத்துடன் வெளியேறும் தோணியை
கடல்
வழிமறித்து மல்லுக்கட்டும்
இடையைப் பிடித்துக் கெஞ்சும்
உதறி மீண்டும்
தோணியின் பக்கங்களையும்
கரையையும்
மாறிமாறித் தொட்டு
அலைமோதி அலைமோதிப் புலம்பும்

தோணிக்கு
ஈரம் சொட்டச் சொட்டக்
கரையேறி நிற்கையில்தான் புரியும்
உடனே பிணக்கைக் களைந்து
இறங்கும் மீண்டும்

கடல்
அதனை அணைத்தபடி
கரைக்கு வந்தே குலவிக்கொண்டிருக்கும்
அந்தக் கரையேற்ற வெளியில்
தோணியும் கடலுடன் குலவும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP