Thursday, July 11, 2013

மீன் பிடிப்பவர்கள்

கழுகுகள் வட்டமிடும்
என் கடற்கரையில் இரவெல்லாம்
விண்மீனில் குளித்த
வல்லங்கள் கடலோடி
வலைகளிலே அள்ளிவந்த
மீன்களைக் கரையில் இறைக்கும்

காலியான கஞ்சிச் சட்டி,
வெற்றிலை புகையிலைப் பெட்டி,
வலைகள் வழியும் வலிய
தோள்களை உயர்த்திக்கொண்டு,

வட்டக்கார, கமிஷன்கார
யாபாரிகள் மொய்த்துக் கிளப்பும்
இரைச்சல்களைப்
பீயென ஒதுக்கி விலகி,

தத்தமது நிழல் சென்று
வலை பழுது பார்க்க அமரும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP