Saturday, July 27, 2013

உறி வெண்ணெய்

குடிசையின் கந்தல் ரூபங்கொண்டது
ஒளிவெளி

சூரியனாய் நக்ஷத்ரங்களாய்
உட்சுடரும் பால்வெளி
குடிசையின்
கந்தல்கள் வழியாய் மாத்ரம்

அந்த சூர்ய நக்ஷத்ரங்கள் வழியாய்
பிரவஹிக்கும் பால்வெளி வெள்ளம்
உள் நிரம்பி
தன் அலைக் கரங்களால்
என் படுக்கையை ஏந்தித்
தாலாட்டத் தொடங்கிற்று

நான் என் தூக்கத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து
கதவைத் திறந்து
-இதுவரை சரிதான்
புறம் வந்தால் – அதுதான் தப்பு

கறைபட்டுப் புரளும் வெளி
கண், உதடுகளிலே
ஒளி வெண்ணெய் சிரிக்கும்
திருட்டுக் கண்ணனாக
முழிக்கும் உலகம்

பெருநிலை நோக்கிக்
கனன்றசையும் உறி வெண்ணெயாக
என்னுள் தொங்கும் ஒரு சுடர் ஒளி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP