Friday, July 12, 2013

நடையழகு

உருளும் அலைகளில்
ஏறி இறங்கி ஏறிச்
செல்லும் படகசைவு

தண்ணிக் குடங்களேந்திச்
செல்லும் இவர்களின் நடையசைவு

உற்றுக் கவனித்தால்
பாழடைந்து பயந்து அழும்
என் நினைவுகளைத்
துயிலூட்டிக் கிடத்திவிடும்
தொட்டிலாட்டு

அப்புறம் நான் மாத்ரமேதான்!
சிலசமயம்
பாற்கடலில் பாம்பணையில்
என் மகாலட்சுமியோடு!

சில சமயம்
நதியில்
துடிதுடித்து மிதந்து செல்லும்
ஒரு அக்னிக் குஞ்சாக!

சில சமயம்
எல்லாம் விழுங்கி
எரியும் ஒரு பெருநெருப்பாக!

சில சமயம்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP