Sunday, March 31, 2013

தீயும் திரைச்சீலைகளும்

தீ எப்படிப் பற்றும்?
தீ எப்படியம் பற்றிக்கொள்ளும்
நீ உன் பயங்கள் பாதுகாப்புகளை மட்டும்
துறந்துவிட்டால் போதும்

தீப் பந்தத்தைப் பிடித்துக்கொண்டு
அலைகிறது காற்று
நாசியின் ஒரு துளைவழி புகுந்து
மறு துளைவழி வெளியேறுகிற காற்று
தான் ஏற்றிவைத்த விளக்கைத்
தானே ஏற்றி விளையாடுகிறது!

திரைச்சீலைகளின் வேட்கை
தாவிப் பிடித்ததும்
கொடியில் தூங்கும் ஆடைகள்
அலமாரிப் புத்தகங்கள் மற்றும்
என் அழகுப் பொருட்களை
வாசித்துத் தீர்க்கிறது
குழந்தைகளின் கும்மாளங்கள்போல்
அது கொண்டாடுகிறது
வீடெங்கும் குதித்து
வீட்டினை அழித்து

ரயில் பெட்டிகளின் ஜன்னல்கள் வழியாய்
நீளும் தலைகளும் கைகளும் போலும்
ஒளிநோக்கி உன்னும் தாவரங்கள் போலும்
உறவு நோக்கியும்
வெளிநோக்கியும் விரித்த முகம்தான்
பட்டென்று
திரும்பி வளைந்து
கூரையைப் பார்த்தபடி
தன் படைகளை நோக்கிக்
கட்டளைக் கூச்சல்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP