Saturday, March 16, 2013

எருக்கம் விதை

வெளியில் பறந்து அலையும்
ஓர் எருக்கம் விதை
ராகமும் லயமும் கூடிய
அதன் கனவுகளே அதன் சிறகுகள்
அது தனது கதையை எழுதத் தேர்ந்த வெளி
அலகிலாததோடு பூமிக்கு அண்மையானதுமாகும்
பூமியின் மாசுகள் குறித்து
அது படும் வேதனை சொல்ல முடியாதது
தன் வேர்களையும் தன் பூமியையும்
தன் உள் வைத்துக்கொண்டே
அது வெளியில் பறக்கும்விதம்
அதை ஒரு தனிக்கிரகம் ஆக்குகிறது
அது தனது குருதியைப் பாலாகவும்
தனது இலைகளை அப்பங்களாகவும் வடித்திருக்கிறது
ஆனால் ஒரு பிரத்யேக அக்கறையுடன்
அவற்றைப் பாதுகாத்துக் கொண்டுமிருக்கிறது
எல்லா ஜீவன்களைப் போலவும்
அது தனது அன்பை
மலர்களாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது
அது நடுங்குகிறது: இரவெங்கும்
அதன் பூக்களை மாலையாய்ச் சூடிக்கொண்டு
பேய்கள் களிப்பதை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP