Wednesday, March 9, 2011

மலையுச்சியினின்றும் இறங்கி

மலையுச்சியினின்றும் இறங்கி
என் பார்வை படும்படி
ஓரமாய் வந்து நின்ற மலரே,

கொய்த பிறகும்
வெகு காலம் வாடாதிருக்கும்
உறுதி கொண்ட நின் தாராளத்தை
நான் ஏற்றுக் கொண்டிருக்கவே கூடாதோவென
இப்போது கலங்குகிறேன்.

உன் அழகு கண்டு
வியந்து நிற்கவே வந்த என்னை
ஒரு நாளில் வாடிப் போகிறதுதானே
பறித்துக் கொள்ளுங்கள் பறித்துக் கொள்ளுங்கள்
என்று கூறிய ஓர் ஏழையின் அன்பை
ஏற்றுக் கொண்டிருக்கவே கூடாதோ?

ஒருநாளும் வாடிப்போகாத அன்பை
உணர்த்தி மடியும்
எளிய உயிர்தானோ நீயும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP