Thursday, March 3, 2011

உயிரின் பேரின்பக் கொண்டாட்டமோ?

உயிரின் பேரின்பக் கொண்டாட்டமோ
ஒரு தாயும் சேயும் கொஞ்சிக் கொண்டிருந்த
காட்சி?

தாயின் மெய்தீண்டலில் அக்குழந்தை
பாதுகாப்பினையும்
குழந்தையின் தீண்டலில் அத்தாய்
பேரின்பத்தையும்
அனுபவித்துக் கொண்டிருந்தார்களோ,
பாதுகாப்பிற்க்குக் கோட்டைகளையும்
இன்பத்திற்குக் கேளிக்கைகளையும்
சார்ந்துவிட்ட இருள் நடுவே
தம்மை மறந்து?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP