Thursday, March 17, 2011

வாயில்கள்

எங்கெங்கும் வெளியேறும் வாயில்கள்
(தப்புதலே வாழ்வாகிப் போனவனுக்கு)

எல்லா வாயில்களுமே சங்கிலித் தொடராக
மற்றொரு மற்றொரு உலகின்
வரவேற்புப் புன்னகை ஏந்திய
உள் நுழையும் வாயில்கள் மட்டுமே
(எப்போதும் வெளி ஆளாய்ப்
புத்துணர்வுடன் விளங்கும் தீரனுக்கு
எதிர்கொள்ளல்களாக உள்ளதே வாழ்க்கை)

உள்ளேறும் வாயில்கள் என்பதும் இல்லை.
அன்னியோன்யனுக்கு
எல்லாமே பேரின்பப் புன்னகை ஏந்திய
அலங்காரத் தோரண வாயில்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP