Monday, March 21, 2011

காகம்

இதற்குத்தான் நான் குளியலறையிலிருக்கும்
நேரம் பார்த்தாயோ?

மூடியிருந்த தட்டைத் திறந்து
ஒரே ஒரு சப்பாத்தியை உன் அலகால் கவ்வி
என் கண் முன்னாலுள்ள மரக்கிளை நின்று சிரிக்கிறாய்

இயற்கையோடு மட்டுமே இருந்த
வெகு நீண்ட எனது ஏகாந்தவாசம் சலித்துவிடாது
உறவு கொள்வதாய் நினைப்போ?

என் ஏகாந்தவாசத்துள் தூசு கிளப்பி
பிறர் பொருளை அபகரித்தல், பசி, துயரம் முதலாய
மனித உலகச்
சிந்தனையைத் திணித்துவிடும் நோக்கமோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP