Tuesday, March 8, 2011

ஏனோ? என்ன அவசரமோ?

நான் மூச்சிரைத்து நிற்கையில்
தன் அருள் முகத்தின் கனிவு காட்டியவாறு
மலை முகட்டினின்றும்
கைநீட்டிக் காத்திருக்கிறார்கள் யாரோ.
என் முதுகை
ஆதரவாய்த் தொட்டும் தாங்கியும்
பொறுமையோடு
என் உடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

உச்சியிலிருந்து சரிவில்
நான் இறங்க முயற்சிக்கையில்
அதற்காகத்தான் காத்திருந்தார்கள் போல்-
பேயோ, தெய்வமோ, இருவரும் இணைந்தோ
பிடரி பிடித்து
அவசர அவசரமாய்த் தள்ளுகிறார்கள் என்னை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP