Thursday, March 10, 2011

இயற்கைச் சீற்றம்

களங்கமின்மையை நாம் அறியோமோ?

இயற்கைச் சீற்றம் இயற்கைச் சீற்றம்
என்னும் தேய்ந்து மடிந்த சொல்லியந்திர ஒலிப்பு,
அல்லது
அறைந்து எழுப்பப்பட்டது போலும்
திடீர் விழிப்புக் கதறல்

மீண்டும்
அதே இயல்பு வாழ்க்கைக்குத்
திரும்புவதுதான்
நமது
இலட்சியமா?

அநீதியும் துயரங்களுமே
தொடரும் வாழ்வெனில்
இடையறாவிழிப்பின்
இயங்கு தளமெங்கே?

அக் குளத்தில்தான் நீந்துகிறதோ
அப் பொன் மீனும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP