Friday, March 4, 2011

இரவு

பேசிக்கொண்டேயிருந்து விட்டதில்
நள்ளிரவாகி விட்டது
கொட்டாவித்து ‘தூங்குவோம்’ என்றான் நண்பன்
இரவைக் கடப்பதற்கு இதுவோ வழி?
‘சரி, நீ தூங்கு’ என்று
அவனை - அவன் வீட்டிற்குப்
பாதிவழி வரை அனுப்பிவிட்டுத் திரும்பினேன்
விளக்குகள் அணைத்துத் துயின்றுகொண்டிருந்தன வீடுகள்
தனித்து மாடிமீது விளக்கெரியும் அறை ஒன்று
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது அனைத்தையும்
அந்த இரவில்
இரவைப் பார்த்துக் கொண்டிருக்கும்
ஏதோ ஒன்றின் கண் அது; அந்த
ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்
இரவின் கண்ணும் அதுவே.
நிச்சயமாக இரவைக் கடக்க முனையும்
வாகனமொன்றின் விளக்கொளியல்ல

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP