Thursday, March 10, 2011

திருமுகமும், வீதிக்குள் அடிவைக்கும் கோலமும்

காற் கொலுசுகள், பறவைகள்
முணுமுணுக்கும் இலைகள்-
அனைத்து ஒலிகளும் மறைந்து
என் கைவளைகள் மாத்ரமே உயிர்த்து நிற்க
இமையா விழிப் பரிதி
துவங்கிய மெல்லொளியில்
இசைந்து அமர்ந்து
நான் என் முற்றத்திலிட்ட மாக்கோலம்-
கண்ணாடியில் பார்த்துக்கொண்ட என் முகம்!
என்றால்
வைகறைத் தெய்வமே! என் உயிரே!
மெய்சிலிர்க்கும் என் உடலன்றோ
இப் பூமி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP