Thursday, March 10, 2011

இருள் ஒளி

கேள்வி இருளுக்கு
ஒளி பதிலானது
எவ்விதம்?
இருளை உற்று நோக்க நோக்க
இருளே ஒளியாயிற்று
ஒளி நோக்கும்
உந்தலற்று அற்று
ஒளியே இருளாயிற்று
இவ்விதமே
இருளும் ஒளியும் ஒன்றாகி
பேரொளி
கேள்வியும் பதிலும் இணைந்து
பெரு வியப்பு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP