Saturday, March 26, 2011

இன்னார்

என்று காணப் போகிறானோ,
தான் இன்னாரென்று கருதிக் கொள்வான்
ஆகப் பெரிய கொலைக் கருவியைத் தான்
தன்னுள் மறைத்துக் கொண்டுள்ளான் என்பதை?

தான் இன்னாரென்பதை ஏற்காதவனன்றோ
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகும்
அன்பு தன்னுள் சுரக்கக் காண்கிறான்

தான் இன்னாரென்று காட்டிக் கொள்வதற்குத்தான்
எத்தனை பாடு இந்த முட்டாள் மனிதர்களுக்கு!
இன்னார் என்றில்லாதிருப்பதுவோ
எத்தனை சுலபமென்னும் எத்தனை ஆபத்து
இம் மூடர் மத்தியில்!
அதனால்தானோ அவர்கள் மறைந்து வாழ்கிறார்கள்?
இல்லை, அப்படித் தெரிகிறார்கள்,
இன்னார்கள் கண்களுக்கு மிகுதியும்
இன்னார்கள் மட்டுமே தென்படுவர் ஆதலால்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP