Wednesday, March 23, 2011

கவனிப்பாரற்றவை

கவனிப்பாரற்றவை தம்மைத்
தீவிரமாய் வெளிப்படுத்திக்கொள்கின்றன

கவனிப்பாரற்றவை
கவியின் உள்ளம்
நகராட்சிப் பள்ளிக்கூடம்
அடித்தட்டு மக்கள்

அஸ்திவாரம் தெரிய நிற்கும் கட்டடம்
(மண் களவு போவதால்)
உயிர் பிழைக்கப் பற்றிய விரல்கள்போல்
வேர்கள் தெரிய நிற்கும் மரங்கள்
காணாமற் போன கூரையின் ஓடுகள்
மேகங்கள் திரண்டு பெய்கையில்
மழைதான் பாடம் நடத்த
ஒண்டும் குழந்தைகளின் ஆனந்த மூலைகள்
மக்கள்தம் காலைக் கடன்கள் கழிக்கத்
தோதாய்ச் சமைந்த ஒதுக்குப்புறம்
வெள்ளைச் சுவர்களெங்கும்
சுதந்திரக் கரி எழுத்துக்கள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP