Tuesday, March 22, 2011

பிள்ளைப் பருவம் போலும்...

பிள்ளைப் பருவம் போலும்
பேதமிலா வாழ்வில்
ஆண் யாரோ? பெண் யாரோ?

ஒளிரும் பேரியற்கைப் பேரெழிலோ
பெண்மை? மற்றும்
அப் பெண்மையினைக் கண்டு எழும்
பேருவகையும் பேரறிவுமோ ஆண்மை?

ஆடியில் தன் அழகைப்
பார்த்து உவந்து கொண்டிருக்கும் பெண்ணே,
இப்போது உன் முகத்தில் சுடர்கிறது
ஒளிரும் பேராண்மை அல்லவா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP