Sunday, March 6, 2011

புல்லின் பெருமிதம்

மாசறு நிலையோ;
அன்பின் பெருவிரிவில்
வேர் கொண்டுள்ள மாண்போ;
சூர்யனைத் தன் தலையில்
தாங்கியமையால்
சுடரும் பேரறிவோ;
இனி அடையப் போவது
ஏதொன்றுமிலாத
உயர் செல்வ நிறைவோ;
அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ;
புன்மையாம் வேகத்
தடையாகி நின்ற பெருவியப்போ
இவ் வைகறைப் பொழுதில்
புத்துயிர்ப்பு கொண்டு நிற்கும்
இப்புல்லின் பெருமிதம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP