Thursday, November 22, 2012

திருநீறு

உன் நெற்றித திருநீறு, என் நெஞ்சில்
ஒரு புத்துணர்வுப் பொழுதின்
பசுமையைத் தோற்றுவிக்கிறதுதான் என்ன!
அது உன் முகமலருடன் இணைந்து
விண் தவழும் ஒரு வெண்மேகமாய் உயிர்க்கிறதெப்படி?

மங்களகரமானதெனவும்
’நீறில்லா நெற்ற பாழ்’ எனவும்
குறிப்பிட்டதொரு மதத்தின் அடையாளமாகவும்

முகிழ்க்கும் எண்ணங்களின் இயக்கம்
தாம் உதறித் குதறியவை எவையெனும் தன்னறிவற்று
உலகை இரத்தக் களறியாக்கிக் கொண்டிருப்பதும்தான் எப்படி?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP