Saturday, September 1, 2012

இவ்வேளை

மரணம் பிறப்பு
இரண்டையும்
மாறி மாறித் தொட்டு மீளும்
ஊஞ்சல் விளையாட்டு
முடிந்தாயிற்றா குழந்தாய்?

காணத் தொடங்கியாயிற்றோ,
பாலத்தில் நின்றபடி
இரண்டையும் தொட்டுக்கொண்டு
பூமியதிரப் புரண்டோடும்
ஆற்றுப் பெருவெள்ளத்தை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP