Friday, September 14, 2012

சோகவனத்தின் அசோக மலர்கள்

நீங்கள் எப்போதும்
விவரிக்கறீர்கள்
’அசோக மலர்கள்’ என்றாலே
போதுமே.’
’சரி.
அசோக மலர்கள்.’

மறுநாள் மாலை
என் வீட்டுக்கு வந்த
கிளிப்பிள்ளைபோலும் வாயுடைய
விமர்சக நண்பர் கூறினார்.
’எல்லோரும் சொல்வது போலவே
நீங்கள் எப்போதும் விவரிக்கறீர்கள்
’மலர்கள்’ என்றாலே போதுமே.’
’சரி
மலர்கள்.’

மறுவாரம் ஞாயிறு சந்திப்பில்
மேஜை மேலிருந்த
என் கைப்பிரதியைப் பார்த்துவிட்டார்
என் கவிதை வித்தக நண்பர்.
என்ன இது ’மலர்கள்’
ஒரு கவிதைத் தொகுப்பிற்கு
மலர்கள் என்ற பெயர்
எத்தனை வெளிப்படையாயிருக்கிறது
எல்லோரும் சொல்வது சரிதான்
நீங்கள் விவரிக்கிறீர்கள்.

நான் மவுனமானேன்
மலர்கள் என்னும் பொருளைக்
குறிப்புணர்த்துவது எப்படி என்று.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP