Friday, September 28, 2012

ஆனால், வாழ்க்கை நம்மை முற்றிலுமாய்க் கைவிட்டுவிடவில்லையே

அலுவலகத்தின்
இடைவேளைத் தனிமை
ஏதாவது ஒன்றில்
அவன் ஏழுதிக் கொண்டிருப்பதைக் கண்டால்
மேலிடத்திற்குப் போகும் பயங்கரமான
புகார்க் கடிதமோ அது என அஞ்சுகிறார்கள்.

நெருக்கடியான நிலைமைகள்
அரசுக்கு ஏற்படுகையிலெல்லாம்
அதற்குக் காரணம் அவன்தானோ என்று
சந்தேகிக்கவும் துன்புறுத்தவும் படுகிறது
அவனது தனிமை.

எந்தக் கூட்டமும் அவன் வருகையை
ஓர் உளவாளியைப் போல்
அஞ்சுகிறது.

ஆனால் அவன் இல்லத்தாள் மட்டும்
அவன் அத்துணை தீவிரத்துடன் எழுதிக் கொண்டிருப்பதை
தன் வாழ்வுக்கு உலை வைத்துவிடும்
களங்கமுடையதோர் கடிதமாயிருக்குமோ என
ஒருநாளும் அஞ்சுவதில்லை.
அவனது சுதந்திரப் பெருவெளியையும்
ஆங்கு சிறகடிக்கும் கவிதையையும்
அவனது எண்ணற்ற வாசகர்களின்
இலக்கியப் பிரதிநிதியே போல்
அவள் நன்கு அறிந்தவளாதலால்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP