Sunday, September 23, 2012

விஷமும் மலமும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
மாறாது நிலவும் ஒரு மிருகத்தை
அவன் கண்களில்
நேருறக் கண்டு நொடிந்தேன்.

அதுவே தன் சுகபோகமாளிகையின்
விட்டுக் கொடுக்க முடியாத காவல் மிருகமென
தன் சகல செயல்பாடுகளின் மூலமுமாய்
உறுமி நிற்கிறான் அவன்.
விலகி நடக்கிறேன்.
அந்த மிருகத்தை
அதன் பலிமனிதர்களைக் கொண்டே
வளர்த்துச் சிரிக்கும் அவன்,
துளி வானமுமில்லா
தன் புதுப்புதுக்கிராமத்திலிருந்து கொண்டே
சகலரையும் இழிவுபடுத்தும்
பொய்களுரைக்கிற அவன்,
சப்பென்று அமர்ந்த மண்ணினின்றும்
குபுக்கென எழுந்துநிற்கும் மலத்தைப் போன்று
காட்சியளிக்கிறான்.

விஷம் விழுங்க வந்த மனிதன்
மலம் விழுங்க நேர்ந்தவனாய்
ஒரு கணம்
அருவருப்பின் எல்லை தொட்டடங்குகிறான்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP