Monday, September 24, 2012

மூடமும் வெறியுமாய்

மூடமும் வெறியுமாய்
மனிதர்கள் மனிதர்கள்மீது கொட்டும்
அழிவின் வாதனையை
வெறுப்பின்றித்
தன்னுள் சுமப்பதெவ்விதம்?

மரத்தின்மேல் மைனாக்கள் கதற
கீழே விழுந்த குஞ்சுப் பறவையை-
கதறக் கதற உன் செல்ல நாய்
கவ்வி உயிர்போக்கியது இன்று.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP