Wednesday, September 12, 2012

அழகுக் குறிப்பு

’வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது,
அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!”
என்றாள் அவர் மகள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP