Sunday, September 9, 2012

கப்பன் பார்க், பெங்களூர்.

அத்தனை நெருக்கடி மிகுந்த
அத்தனை பெரிய நகர் நடுவே
இயற்கை வெளி ஒன்றைக்
காத்துக்கொள்ளும் திட்டமோ
அந்தப் பூங்கா?

அருகழைத்துத் தழுவ நீண்ட
நூறு நூறு கைகளுடைய மரமொன்றின்
சிமெண்டு பெஞ்சில்
ஏதோ ஒரு செயல்திட்டத்திற்குப்
பணிந்துவந்து அமர்ந்திருப்பவர்கள் போல்
மவுனமாக அமர்ந்திருந்தது ஒரு ஜோடி,
தங்கள் முழங்கால்மேல்
மூக்குரசும் குழந்தையுடன்.

எந்த ஒரு திட்டம் அது?
போர்களினின்றும் துயர்களினின்றும்
இவ்வுலகைக் காத்துவிடும் தீவிர அவசரப்
பெருந்திட்ட மொன்றின் முதல் வேலையாக
இருவருக்குமிடையே
ஓர் உச்சபட்ச அன்னியோன்யத்தை
உண்டாக்கிவிடும் நோக்கமோ?
அங்கு உள்நுழையும் ஒவ்வொருவரிடமும்
செயல்படத் துடித்துக் கொண்டும்
தோற்றுக் கொண்டேயிருக்கிறதும் அதுவோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP