Sunday, September 16, 2012

பாப்பாத்தி மக்கள்

அம்மா ரொம்பச் சிவப்பாக இருந்ததால்
பாப்பாத்தி எனப் பெயர் சூட்டினார்களாம்.
மகிழ்ச்சியின் துவக்கப் புள்ளியோ அது?

’காலத்தின் கூத்’தால்
அவன் மேலே வந்திருந்தால்
அவனை ஒரு பாப்பாத்தி வந்து கட்டிக்கொள்ள
தொடர்ந்த்தே மகிழ்ச்சியின் பாரம்பரியம்!

பார்ப்பன மருமகனுமாய் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்
இன்னும் அழுத்தமாய்த் தொடர்ந்ததே
அந்த மகிழ்ச்சியின் பாரம்பரியம்!

இருப்பினும் அத்தோடு
எந்த இழிவும் பாவமும் ஒழியாத நிலையின்
அறுபடாத ஆசாரத் தொடர்ச்சிதான் விநோதம்.
அத்தோடு
கருநிறத்தவளாய்ப் பிறந்துவிட்ட அவன் மகள்
ஒவ்வொரு கணமும் தன்னை நீரூபிக்கத்
தன் பேச்சிலும் நடையிலும் ஆசாரத்திலுமாய்த்
திணறிக் கொண்டிருக்கும் பரிதாபமோ
எத்தனை இரக்கத்திற்குரிய விநோதம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP