Tuesday, September 25, 2012

நால்வர்

தவறி விழுந்திருந்த தன் பொற்காசினைக் கண்டெடுக்கக்
கிளறிக் கொண்டிருந்தான் ஒருவன்.

தவறி விழுந்திருந்த தன் சோற்றைக் கண்டெடுக்கக்
கிளறிக் கொண்டிருந்தான் ஒருவன்.

மலம் போல் கேவலமாகிக் கிடந்த சாக்கடையை
வீணே அலம்பிக் கொண்டிருந்தான் ஓர் அசமந்தன்.

தன் பார்வையே உக்கிரச் செயலாகப்
பார்த்துக் கொண்டிருந்தான் பரிதி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP