Monday, September 24, 2012

நம் பெருங்கோயில்கள்

ஆதியில் முளைத்த
நம் கோயில் இதுவா?
அக் கோயிலுக்குள்ளே விஷமொன்றிற்கு
இடமிருந்ததோ அப்போதே?

அத்தனை மனிதர்களும்
தமது அத்தனையையும் கழற்றி வைத்துவிட்டு
குனிந்த தலையுடன்
கூடிநிற்கும் தலத்தினையே
தம் கொலைப்பீடமாய்த் தேர்ந்து
திட்டமிட்டு வளப்படுத்திவரும்
மானுடக் கழிசடைகள்தாம்
அந்த விஷமா?

எத்தனை வல்லமை, எத்தனை நேர்மை,
எத்தனை தீரம்?
எத்தகைய மேன்மைகளுடைய மானுடம்
குருதி உலராது
துணித்த தலைகளுடன்
காலம் காலமாய்
கோயில் கிணற்றுக்குள் வீழ்ந்து
இமைக்காது நோக்கிக் கொண்டிருக்கின்றது
நம்மை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP