Saturday, September 29, 2012

அவ்வளவுதான் விஷயம்

நம் வன்கொடுங் கொலைவாள்களெல்லாம்
வருந்திக் கழன்றுதிர,
வான் ஒளிர்த்தும் கைகளெல்லாம்
மிதந்து இனிதாய் மேலெழும்ப,
தனக்கேயுரிய மாபெரும் அசட்டுத்தனத்துடன் முயலும்
குழந்தையின் கையிலுள்ள பொம்மைத் துப்பாக்கி!

நம்மிஷ்டம் நம் சுதந்திரம்
எதற்கும் தடையில்லை.
ஆனால் நாம் அக் குழந்தையை அழித்துவிடுவது
பொருட்படுத்தாது கடந்து சென்று விடுவது
எல்லாமே ஒன்றுதான்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP