Tuesday, September 11, 2012

மெய்யாகவே

சொல்லொணாப் பேரழகாய்
ஆகச் சிறந்த பரிசொன்றின்
அற்புத ஒளியாய்
கண்முன்னே புன்னகைக்கும்
இக் காலைப் பொழுது.

மயக்கமோ
மாயத்தோற்றமோ
அல்ல
மெய்யாகவே
மெய்யாகவே
கதறி அழுதுகொண்டிருந்த
ஆயிரமாயிரம் ஆண்டுத்
துயரிரவின்
உறுதி இறுதியேதான்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP