Saturday, September 29, 2012

பள்ளமும் வெள்ளமும்

துயில்வோர் அறியாத
நள்ளிரவுப் பெருமழையோ?

வீதி பெருகி
வீட்டுள்ளே புகுந்திட்ட
வெள்ளமோ?

வீடுகள் பலரது மத்தியில்
தாழ்ந்து நிற்கும்
வீட்டுள் மட்டும்
உறும் விருந்தோ?

தாழ்ந்தும்
தரைவிடாதிருக்கும்
தரையினைத்
தேய்க்கும் படையோ?

பின் நகர்ந்த வெள்ளம்தான்
விரும்பும்போதெல்லாம் பாய்ந்துவர
வடித்துச் சென்றிருக்கும் பள்ளமோ?

பெருமழையும் வெள்ளமும்
எப்போதும் இரைந்து கொண்டிருக்கும்
வெற்றிடமோ?

யாருக்கும் தெரியாத
அவன் தவிப்பும் தத்தளிப்பும்
இன்பமும் பெறுபேறுகளுமோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP