Saturday, September 15, 2012

கொசுபத்தி

படித்தது போதும்
விளக்கை அணை.
நின் அரிதுயிலில்
உணரப்படட்டும்,
ஓர் மூலையில் அமர்ந்துகொண்டு
எரியும் ஒரு கொசுபத்தி போலும்
ஓர் ஊதுபத்தி போலும்
இவ் அண்டம் முழுக்கப்
பரவி நிறைந்து கொண்டிருக்கும்
துயிலென்பதறியாத
விழிப்பொன்றின் மாண்புகள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP