Friday, September 14, 2012

வேரழுகினசெடி

நாடுகள் மதங்கள் நூற்றுச்
சடங்கு நம்பிக்கைகள்
நம்மைக் கூறுபோட்டு
அழகுமீதும் அறத்தின்மீதும்
ஒளிரும் நுண்ணுணர்வுகளை
அழித்ததல்லாது
செய்கிறதென்ன?

தீமைகளோடு கூடிய நம் சமரசம்
வேதனையின் பள்ளத்தாக்கை
வந்தடையவில்லையா?

அன்பின் பெருநிறைவை
அடைந்திலமை அறியோமோ?

பேராசைகளிலும் பகட்டுகளிலும்
குதூகலிக்கிற உள்ளத்தின்
வெற்றாரவாரங்கள்
மெய்ப்பொருளை ஆழ்த்திவிடுதல்
அறியோமோ?

அநீதிகளாலும் வறுமையாலும்
எரிந்துகொண்டிருக்கும் ஏழைகள்
திக்கற்றவராதலறியோமோ?

எதிர்தீவினைகள் அறியோமோ?

வேரழுகின செடியினதுவாய்
வெகுவேகமாய் வாடுகின்றனவே
சோகவனத்தின் அசோகமலர்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP