Saturday, September 22, 2012

நடுநிலைப் பள்ளி இடைவேளை

விழியகற்ற முடியாத
அழகின்பக் காட்சியாய்
ஆய்வாளர் கண்ணில்பட்டது
தேன்கூட்டை மொய்த்துக் கனலும்
தேனீக்கள்.

வெறுமையிலிருந்த
அத் தேன்கூட்டை உருவாக்கியதும்
வெறுமையின் மலர்களிலிருந்தும்
அத் தேன்கூட்டை நிரப்பியதும்
தாங்களே என்பதறியாத மாணவர்களும்
தங்களை அறியச்
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்
ஓர் ஆசிரியப் பூஜ்யனும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP