Thursday, September 13, 2012

ஒரு நதிக் கரையோரம்

ஆடைகள் கழற்றிவைக்கும் கல்மண்டபம்
சகிக்க முடியாதபடி அசுத்தமாக இருந்தது.
ஆற்று நீர் குளிக்க உகந்ததாக இருக்கிறதா-
யோசிப்பவர்களாய் எட்டிப் பார்த்தார்கள் அவர்கள்.
பூஜை மணியோசையும், பறவைகள்
அதிர்ந்து கலையும் ஒலியும் கேட்டன.
நடை சாற்றப்படுவதற்குள்
கோவிலுக்குள் நுழைந்துவிட வேண்டிய
அவசரத்திலிருந்தார்கள் அவர்கள்.

திடுக்கிடும்படி
நீர்க்கரை மரத்தில் ஒரு பறவை
தன்னந்தனியாய்
தன் உயிரே போவதுபோல்
ஓர் அபாய அறிவிப்பைப் போல்
உறுதிமயமான ஒரு குரலில்
விடாது கத்திக் கொண்டேயிருந்தது.
நின்று, பாறைகள் நடுவே களகளவென்று
மூச்சுவிடாமல் செவிமடுக்கப்படாதவை போல்
துயர் கனத்துக் கொண்டிருந்தன,
அங்கு நிலவிய மவுனமும் ஒலிகளும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP