Thursday, October 11, 2012

மார்கழி மாதம்

மார்கழி மாதம் –
வேறென்ன வேண்டும்?
உயிரின் உயிரைத்
தீண்டுகிறது குளிர்.
கோலங்களில் வந்தமர்கிறது
மலர்.

கொடியதொரு காலம்.
உயிரை ஜில்லிட வைத்து
மரக்கச் செய்கிறது
ஆரம்பத் திகில்.
அலங்கோலமெங்கும்
தெறிக்கும் குருதி
அவன் பிரக்ஞைக்கு வராது.

கொடியதொரு காலத்தில்
கொடியதொரு காலமேயாயிருக்கும்
மனிதர்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP