Sunday, October 21, 2012

பாறாங்கற்கள்

உடைந்து உருக்குலைந்து
தனித் தனியாகப் பிரிந்து நிற்கும்
இவை மலைகளோ?
நெஞ்சை அதிரவைக்கும்
இப் பயங்கரத்தின் பொருள்தான் என்ன?

கொடுங் காற்று மழைவெள்ளத்தில் உருண்டு
ஆடுகளை சிறுவர்களை மனிதர்களை
கொன்றழித்துப் படிந்த இரத்தக் கறைகளோ
கண்ணீரோ உண்டோ அவற்றிடம்?

கொடுங்கரங்கள் சில தங்களை உருட்டி
அடிவாரப் பாதையில் உலவி வரும்
மெய்யறிவாளர்களைக் கொல்வதற்குத்
தாங்கள் உடந்தையாயிருப்பதையோ
தங்கள் அபாரமான சக்தியையோ
அறியும் அறிவுண்டோ அவற்றிடம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP