Saturday, October 6, 2012

இலைகளின் வடிவம்

நீராலான இவ்வுலகில்
காற்றின் தாலாட்டில்
கண்மயங்கி நிற்கும்
காலிப் படகோ நான்?

இதுவே என் வாழ்வின்
மகத்தான பேறோ?
மானுடமனைத்தும் விடுதலை பெற்று
இப் பேற்றினை எய்தும் –
வழி சுட்டுவதே
இனி நம் வாழ்வின்
மகத்தான இலட்சியமோ?

அழியாத இந்நினைவையே
யுக யுகாந்திரங்களாய்
தன்னில் மறவாது கொண்டிருக்கும்
கோடானு கோடி இலைகள் அத்தனையிலும்
தம் படகுவடிவம் புரிந்து கொள்ளப்பட
பேரானந்தம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP