Sunday, October 7, 2012

ஒரு புல்தாவரம்

கவியின் அம்சமோ?
வெளிப்படுத்தப்படாவிட்டால் ஆகாதோ?

காலமெல்லாம்
மவுனமாய்
மண்ணிற் புதைந்து கிடந்து
ஆண்டுக்கொருமுறை – சித்திரை மாதம் –
அன்பின் ஆர்வத்தால் ஊதிப் பெருத்த
ஓர் இதய இரத்தக் குழாய் போய்
நீண்ட மென் தண்டொன்றின் முனையில்
குமிழியிட்ட ஒற்றை மலரோ
ஒரு நூறின் கொத்தோ என
கோள வடிவில்
ஒரு கொள்ளை அழகை
உருட்டி நீட்டுகிறது
இந்தப் புல் தாவரம்.

ஆயின், இன்பம் எங்கே?
நம் வாழ்வைக்
கேள்விக்குரியதாக்குகின்றனவே
அன்பினதும் அழகினதும் முன்னிலையில்
கண்ணீரை ஊற்றெடுத்து நிற்கின்ற
நம் கண்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP