Tuesday, October 9, 2012

பறவைகள்

அண்ட சராசரமெங்கும்
அலைந்து திரிந்து
கட்டக் கடைசியாய்
இங்கே வந்து
காலூன்றி நிற்கும் இவை என்ன?

இம் மரங்களின் காலடியில்
கலையாத கார்மேகங்களென
மகிழ்ந்து குழுமி
மண்டிக் கிடக்கும்
இந் நிழல்களின் பொருள்?

இந் நிழல்களின்
இடையறாத குளிர்மையில்
வால் சுருட்டி கால் மடக்கி
அமர்ந்திருக்கும் விலங்குகளென
வீடுகள்!

இவ் வீடுகளுக்குள்ளோ
தன் இல் உறைவான் குறித்து
ஒரு சொல் உதிர்க்காத மவுனம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP