Monday, October 29, 2012

தியானம்

முதுமையோ இது?
ஒவ்வொரு நண்பகல் இடைவேளையிலும்
நான் சற்றே தலைசாய்த்து
விழி மூடி நாடுவது உறக்கம் இல்லை எனில்
அது என்ன?

அவ்வேளை
அத்தனை சுற்றுப்புற ஒலிகளும்
மூளைப் பிராந்தியத்திற்குள்ளே நடப்பதுவாகி
உறக்கம் அறுக்கும்
இடையூறாவதுதான் என்ன?

விழித்துக்கொண்ட மூளை
செய்யத் தொடங்குவதுதான் என்ன?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP