Friday, October 19, 2012

*மணப்பாடு

மலையைப் பொடியாக்கிய
சூரியனுக்கு எதிராய்
மணலை
உயர்த்திக் கொண்டிருக்கிறதோ
கடலிங்கே?

மண்ணைப் பாறையாக்கும்
பாறையைக் குகையாக்கும்
மனிதனை எதுவாக்கும்
இக் கடல்?

வீறழைப்பை விரைந்தேற்க
மனிதர்க்காகத்
துடித்துக் கொண்டிருக்கின்றன
படகுகளும் வள்ளங்களும்;
கொடுத்துக் கொடுத்து ஊறக்
குருதிக் கதகதப்புடன் காத்திருக்கிறது
நன்னீர்ச் சிறுகிணறும்

மனிதர்களைத்தாம் காணோம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP