Thursday, October 25, 2012

”க்வாக்!”

தூக்கிய குண்டியும்
மலப்பிசுக்கின் உராய்வை
அருவருத்தது போன்ற நடையுமாய்
நீர்நிலை நோக்கி
நடந்து செல்லும் வாத்தே,

நீரைத் தரித்துக்கொண்டதும்
பொடுக்கென்று
தீணடப்பட்டுவிட்டவனேபோல்
உடல் சிலிர்த்துக்கொள்கிறாய்

திடீரென வாழ்வின்
பெருபேறுணர்ந்த வேகம்,
விசேஷமான பாதங்கள்
தன்னிறைவு பெற்ற பரவசம்-
படபடக்க நீந்துகிறாய்

விழித்துக்கொண்டவன்போல்
பீடு ஒளிரும் குருதி அதிர
விண்ணிலிருந்து வந்ததன் அடையாளம்
தன்னில் கண்டு
சிறகு தட்டிக் கொள்கிறாய்

கண்ணிறைந்த வெளியில்
கண்டுவிட்டதையோ
அப்படி ஒலிக்கிறாய்
அந்த மவுனத்தில்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP