Wednesday, October 31, 2012

நீரிலா? ஒளியிலா?

கனன்று சிவந்த இத்தாமரை
மிதந்து கொண்டிருப்பது நீரிலா? ஒளியிலா?

நீரை உறிஞ்சி அவளைத் தன்னோடு
பொத்திக்கொள்ள விரும்பும் ஆசையை
விட்டுக் கொடுத்துவிட்டது மண்!

மண்ணில் இடம் பிடித்துக்கொண்ட நீரோ
ஆசையால் பொங்கிப் பொங்கி
அவளை முழுங்கிக்கொள்ளத் தாவுகிறது!

தனது விண்ணுடல் கொண்டு
நீரில் மூழ்கிவிடாது மிதந்தபடி
மேலேமேலே நீண்டுநீண்டு
ஒளிக்கடலில் மூழ்கிவிடவே துடிக்கிறாள் அவள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP